*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, May 12, 2014

யுகங்கள் வெல்லுமொரு யுத்தம்...


என்னைக்
கொலை செய்த நேரமாவது
ஞாபகமிருக்கிறதா உனக்கு
அன்றைய இரவில்
சுவரொட்டிகூட கண் விழித்திருந்ததே
ஒரு வியாழக்கிழமை சரியாக இரவு 1.47

என்னைக்கொன்ற நீ
களைப்போடு போர்வைக்குள் நுழைய
முற்பட்டுக்கொண்டிருந்தாய்
அந்தப் பல்லி உரைத்த ஒரு சொல்லில்
எதையோ நினைத்தவனாய்
தண்ணீர் குடித்து
வானொலியில் ஒரு பாடலை
இசைக்க விட்டிருந்தாய்

பாடலில் என் கொலை
மொழிபெயர்க்கப்பட்டிருந்தது


நீ கன்னத்து முடி தள்ளிப் பதித்த முத்தமும்
உதடு கடித்துப் துப்பிய குருதியின் மணமும்
கொலை செய்யமுன் புணர்ந்த ஒரு காட்சியும்
தொப்புள் நிரப்பிய விஸ்கியில்
உன் நாவிட்டு உறிஞ்சிய சத்தமும்

எப்படிச் சாத்தியமானது

மீண்டுமொரு முறை
அதே வரிசைப்படுத்தலில்
என்னைக் கொலை செய்
இன்னொருமுறை
உன் ஆக்கிரமிப்பின்
ஆளுமைக்காக....!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

அப்பாதுரை said...

ரசித்தேன்.

Thenammai Lakshmanan said...

மிக நீண்ட நாள் கழித்து ஹேமாவின் கவிதை வாசித்தேன். அருமை.. !

Seeni said...

ஆஹா...

Post a Comment