*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, October 04, 2013

மாயக் காதல்...


நரக வழி தவறி
கூர்ப்பிழந்து தவிக்கையில்
தேவதைகளை செதுக்கும்
அன்பின் உளியொன்றாய்
நெருங்கிச் சிரிக்கிறது
ஒரு நிழல்.

கசங்கிய துணியொன்றை
அழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு

தேடிய கனவொன்றை
கையேந்தும் சிலையொன்றை
செதுக்கும் ஆர்வத்தோடு
என்னை
குழைத்துச் செதுக்க
தன் கனவைச் சொல்லி
தனக்கான அதிகாரத்தை
எடுத்தும் கொள்கிறது.

தூரிகைக்குள்
என் வண்ணமெடுத்து
உயிருக்கான
நிறமும் கொடுத்து
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்தும் விடுகிறது.

மூச்சிழந்து
தேவதை தவிக்கையில்....

காமமும் காதலும் வேறென
தத்துவம் சொல்லி
கண்ணைக் கட்டி
மறைந்தும் போகிறது
மீண்டும் வருவேனென!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

Anonymous said...

வணக்கம்
தூரிகைக்குள்
என் வண்ணமெடுத்து
உயிருக்கான
நிறமும் கொடுத்து
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்தும் விடுகிறது

அழகான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவியாழி said...

காமமும் காதலும் வேறுதான்

ஸ்ரீராம். said...

வாமன முத்தம்!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

ஆழமான பொருளுடன்
அற்புதமான சொல்லாட்சியுடன் அமைந்த
அழகான கவிதைப் பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

தீபிகா(Theepika) said...

//கசங்கிய துணியொன்றை
அழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு//
அழகு.

'பரிவை' சே.குமார் said...

அழகிய கவிதை வரிகள்...
வாழ்த்துக்கள் சகோதரி....

Post a Comment