*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, October 04, 2013

பெருநாகமும் நானும்...


மாறத்தொடங்கியிருந்தான்
என்னவன்....

உருவெடுத்திருந்தாள்
அவள்
அன்பு மலையென
எனக்கும்
அவனுக்குமிடையில்.

கணங்கள் சுருங்கும்
வேளை
அன்புக் கயிற்றை
அவள் மெல்ல இழுக்க
அவனுக்கான
என் கவிதைகளை
அழிக்கத் தொடங்கியிருந்தது
பெருமழை.

நச்சு நாகமென
மாறியவள்
என்னை மெல்ல
மிண்டி
விழுங்கிக் கொண்டிருந்தாள்.

நன்றியுள்ள அவனால்
கடிக்கவோ குதறவோ
முடியாமல் போனது
அப்பொழுது.

விட்டு விட்டு விழுங்கும்
நாகமும்
நானும்
வேண்டிக்கொண்டிருந்தோம்
அன்பின் அவனுக்காக!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

Sakthi said...

Nice hema

Sakthi said...

Nice hema

கும்மாச்சி said...

கவிதை அருமை ஹேமா.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான கவிதை...

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதை...
வாழ்த்துக்கள் சகோதரி.

தனிமரம் said...

படிமங்கள் அதிகம் கொண்ட கவி வரிகள் அருமை கவிதாயினி.

ஸ்ரீராம். said...

அருமை.

மிண்டி?

ஹேமா said...

ஸ்ரீராம்....மிண்டி = கடினம்,நெம்பு,தைரியம்

Post a Comment