*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 21, 2012

படுபள்ளம்...

சிலர்.... நேற்றைய இரவில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
கால் தடுக்கி
காலையில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
தற்கொலையாக
இருக்கலாமென்றும்...

சந்தேகப் பெயர்களை
சிலரும்...
ஏனையோர்
என் குடும்பம் குறித்தும்
பரிதாபப்படுகிறார்கள் !

ஹேமா(சுவிஸ்)

(படம் கவிஞர் மகுடேஸ்வரன் தந்தது)

27 comments:

Yoga.S. said...

பகல் வணக்கம் ஹேமா!கவிதை அருமை.அதுவாக இருக்குமோ,இதுவாக இருக்குமோ என்று.............ஹும்!

பால கணேஷ் said...

ம்ம்ம்... பலரும் பலவிதமாகப் பேசத்தான் செய்வார்கள். அனைத்து மனிதர்களும் ஒரேவிதமாக இருப்பதில்லையே ஃப்ரெணட். நல்ல கவிதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை அருமை.

K said...

வணக்கம் ஹேமா அக்கா!

அழகான கவிதை ஒன்றைத் தந்திருக்கிறீங்க! வாழ்த்துக்கள் அக்கா!

ராமலக்ஷ்மி said...

சிறப்பான கவிதை ஹேமா.

முற்றும் அறிந்த அதிரா said...

அப்போ நடந்தது என்ன ஹேமா?

மாத்தி ஓசிக்கிறாக்களைக் கொண்டு கண்டுபிடிப்பமோ?:))....

முளையிலயே கிள்ளிடுங்க ஹேமா:)).. விட்டால் “ஆன்ரி” என்றும் சொல்லிப்போடுவினம்:).. கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

Tamilthotil said...

புதுவிதமான ஒரு உணர்வை இந்த கவிதை தருகிறது.

Unknown said...


வித்தியாசமான கவிதை!

அப்பாதுரை said...

goodness.. ரொம்ப பாதிக்கிறது கடைசி வரிகள்.

Anonymous said...

புதுமையான கவிதை அக்கா.....

அ. வேல்முருகன் said...

ஆம்
விமர்சனங்கள்
விதவிதமாய்

வலையுகம் said...

மிக வித்தியாசமான கவிதை பகிர்வுக்கு நன்றி

மாதேவி said...

பற்பல கதைகள்...

இதைத்தான் "உலைவாயை மூடலாம் ஊர்வாயை மூடமுடியுமா" எனச்சொல்கின்றார்கள் போலும்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Angel said...

ம்ம்ம் எத்தனை யூகங்கள் !! அனுமானங்கள்
உங்க கவிதை இதயத்துள் ஈட்டியாய் நுழைந்து கண்களில் குபுக்னு கண்ணீர் வர வைக்குது

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான கவிதை...

அருணா செல்வம் said...

படுபள்ளமானது மனம்!
அதனுள் இருப்பது
அதற்கு மட்டுமே...

ஆழ்ந்த கருத்து.. என் இனிய தோழி ஹேமா.

ஸ்ரீராம். said...

அவல் மெல்லும் வாய்கள்!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ஹேம்ஸ்..

வெற்றிவேல் said...

இந்தப் படு பாதாள, பள்ளமான மனத்தில் என்னென்ன உள்ளது...

அருமை...

உயர்ந்த சிந்தனை....

தனிமரம் said...

பாழ் கிணறு!ம்ம் பலரை திருத்தி உயிர் வாங்கி!ம்ம் அருமை கவிதை!

தமிழ் காமெடி உலகம் said...

கவிதை நல்லா இருக்கு..இன்னும் நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள்....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான கவிதை......பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Muruganandan M.K. said...

வெட்டிப் பேச்சு
வேலையற்றவர்களின்
சிறப்புரிமை.
ஹா ஹா

மாலதி said...

உண்மையில் இந்த சமூகம் உண்மையான விமர்சன பார்வையை கொண்டிருப்பதில்லை ஆளாலுக்கு ஒருவிதமான காரண காரியங்களை முன்வைப்பார்கள் அதற்க்கு சான்று கட்டுவார்கள் உண்மையோ வேராக இருக்கும் ...

sury siva said...


நான் விழுந்தேன்
இறந்தேனா ! தெரியவில்லை. .
இறந்தேன் என‌
எண்ணி

அஞ்சலி சொல்ல
ஆயிரம் பேர் இன்று .

கண்ணீர் விடுவோரே !
கதறி அழுவோரே !

பதறி நிற்கும் சோதரரே ! நீர் என்னை
உதறி நின்ற காலத்தை மறந்தீரோ !!

சிதறிக்கிடக்கும் என் பிள்ளைகள் !
உதவி செய்ய யார் வருவார் ?

( இது மாதிரியும் யோசிக்கலாமோ ! )

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

ஆத்மா said...

படத்திலிருப்பதல்ல படுபள்ளம் என்னைப் பொருத்தவரையில் சிலரது உள்ளத்தில் இருக்கிறது படு பள்ளம்...

கவிதை அழகு

Post a Comment