*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, April 21, 2014

நீலக்குருவி....


உயர்தர நிறங்களை
வறுமை தின்ன
நீல நிறத்தை
நிறைத்து நெளிகிறது
அவனது தூரிகைகள்
நீட்சிகளைப் பருகியபடி.

அவனறியாமல்
நீல அலைகளோடு
சுவரொட்டிய நான்
வெளித்தள்ளும்
குமிழ் மூச்சை மேயவிட
மீண்டுமது
உருத்திராட்சப் பூனையென
உருமாறி
உள்ளூரப் பயம் நனைக்கும்
வியர்வையாய்.

புத்தனின் வார்த்தைகளை
நிர்வாணப் பிண்டங்களை
நகரங்களின் அழிவுகளை
நிலாவை
நீரை
இயல்பாய்
மஞ்சளெனவும்
சிவப்பெனவும் கரைத்து
நீலங்களையே அப்பி வரைந்து
புன்னகைத்த உதடுகளால்
அள்ளிக் குதூகலித்தவன்...

கண் தூளிகளில்
கலங்கிய நீல நிறத்தை
இரவில்
என் ஆடையாக்கியாக்கிவிட்ட
அந்தகன் அவன்
அறியவில்லை
என் நுனி விரல்களில் ஒட்டிய
நீலக்குருவியின் இறக்கைகளை.

இருட்டிய கண்களில்

ஒட்டிய மிச்ச நீலத்துளிகள்
இரவை இன்னும் கருப்பாக்க
கீறிமுடிக்கா
நீலக்குருவிகளும்
வானங்களும்
முகங்களும்
மயில்களும்
அவன் தூரிகையில்
நீலங்களாக மட்டுமே
அதனதன் சாயலை
ஒத்தபடி.

சூத்திரம் நிறைந்த
புகழின் உச்சியில்
வறுமையும் நீலமும்
என்னை
நிராகரித்தொடங்கியிருந்ததப்போ...

அவனும் ??? !!!

Artist என்கிற மலையாளப்படத்தின் பாதிப்புக் கவிதையானது.
நண்பர் ”இத்ரீஸ்” ன் இந்த நீலக்குருவி ஓவியமும் மிகப்பொருந்தியது !

ஹேமா(சுவிஸ்)

2 comments:

'பரிவை' சே.குமார் said...

படமும் கவிதையும் பொறுத்தமாய்...
வாழ்த்துக்கள் சகோதரி.

Unknown said...

கவி வரிகளும்,ஓவியமும் பொருந்தி ..............நன்று!

Post a Comment