*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, August 09, 2014

முக்கண்ணன்...

கருவியில் கண் வைத்து
துளைப்பவன் சும்மாயில்லை.

இயற்கையை
போரை
பிண்டத்தை
பணத்தை
பாசத்தை
காதலைக்
கடவுளை
அழிவை
ஆற்றலை
உயிராக்கி
உணர்வாக்கி...

நிஜத்தை நிழலாக்கி
சொல்லாத சொற்களைக்
கிளிக் கில் கூட்டியெடுத்து
புகையாக்கி...

பறவையைப் படமாக்கியவன்
சிறகுகளையும் வானத்தையும்
தனக்குள் அடக்கி...

விரும்பினால்
வியாபாரமாக்கியும்
வெளிப்பாடாக்கியும்...

வில்லனாயும்
உண்மை சொல்லும்
வீரனாயும்
அவனே ஊடகத்தில்!!!

நிழலில் ஜெரா நன்றி !

Jera Thampi

குழந்தைநிலா ஹேமா

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அழகிய கவிகண்டு மகிந்தேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

......................... முக்கண்ணன் .ஜெராவும்...........!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை சகோதரி.

Post a Comment