*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 01, 2014

நினைவோடு வாழ்த்து ....

முழுமதியன்று
என் தேநீர் குவளையில்
தவறி விழுந்த
ஓர் பால்நிலாத்துண்டு
அலைந்து களைத்துப்போய்
உருகித் தேய்ந்து தத்தளிகிறதே...

ம்...
எடுத்து வைக்கிறேன்
குளிர்ந்த பாலில்
அவன் வரும்வரை
சிந்தும் முத்தங்களை
சிந்தாமல் சேமித்து
சந்தம் பாடியே
மூழ்கிய நிலவை
முழுதாய்
சரிசெய்துகொள்ள !

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராம் !


Saminathan Ramakrishnan
 
குழந்தைநிலா ஹேமா

4 comments:

தனிமரம் said...

கவிதை அழகு நிலவு போல!

தனிமரம் said...

ராமுக்கு இனிய வாழ்த்துக்கள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
என்பக்கம்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

Post a Comment