*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, June 24, 2014

பிடி நழுவா முகச்சில்லுகள்...

கவித்துவமாய்
மந்திரக்காரியின் அலறல்
என் காலில் கோலுடைத்தபடி.

மஞ்சள் நீரில்
முக்கியெழும்பி
கொம்பில்லா விலங்கு பற்றி
பண் அள்ளித் தெளிக்கிறாள்
கண்ணில்லா
ஆந்தையின் சாம்பலோடு.

அஞ்சி நகர்ந்து
கரம் குவித்த மார்மேல்
மலர்குற்றிய கூனல் கிழவி
கூர்வாளால் திருப்பி
கெக்களித்த கோரமுகத்தில்...

நீ நனைந்து நாளாயிற்று
உன் இதயம் சாக்கடை
உனதல்லா முகமும்
ஈரமில்லா இதயமும்
ஏனுனக்குச் சனியனே...

கோலித் திரும்பிய
கொக்கிப்புழுவென
தாயும் நாயும் காக்கவியலா
உன்னை
திருகுவது தவிர வேறில்லையென
கொக்கரித்து
குரல்வளை அழுத்த...

மண் அழுந்த
மரமாகியிருந்தேன்
வேருக்கு விழிநீர் வழிய
ஊன்றிய கால்களோடு!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

Unknown said...

ஹூம்..................நன்று!

Post a Comment