*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 29, 2013

எனக்கான காடு...


உனக்கும் எனக்குமான
இந்தப் பெரும் காட்டில்
இல்லாதிருக்கிறது
என் சந்ததிக்கான இடம்.

பாறைகளில் மோதி வீழும்
பறவையல்ல நான்
வல்லமையற்ற மனதோடு
திசைகளை
மாறிக் கீறிக்கொள்ள
முட்டாள்களின்
வழித்தோன்றலும் அல்ல.

புகைப்படங்களிலும்
பொருட்காட்சிச்சாலையிலும்
தொங்கும் காட்சிப்பொருளல்ல
எங்கள் அவல வாழ்வு.

முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....

இது எனக்கான காடு
இளங்கன்றுகள் பயமறியாது
எச்சரிக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

தனிமரம் said...

எச்சரிப்புக்கள் கூட எம்நிலையை எழுத்தில் அறிவிக்கட்டும்.சிந்திக்கத்தூண்டும் கவிதை.

Seeni said...

azhaku..

கவியாழி said...

எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....
வாழ்த்துக்குள் தொடங்குங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த நம்பிக்கையுடன் மன உறுதி வேண்டும்...

வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said...

Nice.,

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Unknown said...

முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....

தமிழனின் வரலாறு முறையாகத் தொகுக்கப் படவில்லை! நம் முன்னவர் செய்த தவறை பின்னவராவது சரிசெய்யட்டும் உங்கள் ஆதங்கம் சரியே! நலமா?

'பரிவை' சே.குமார் said...

இது எனக்கான காடு...
கலக்கல் கவிதை...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! நன்றி!

வெற்றிவேல் said...

முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....

நம் வரலாறும் நம் பெருமையும் நாம் அறியாமல் இருப்பது பிழை தான்...

Post a Comment