*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, November 30, 2012

காதல் வலி...

இறக்கைகளை ஒவ்வொன்றாகப்
பிய்த்து ரசிக்கிறாய்
ஒருமுறை
ஒரே ஒருமுறை
நாம் வைத்த அன்புக்காக்
இரக்கம் காட்டு
களிம்பு தடவு
ஒற்றை முத்தம் தா
சிறகு முளைக்க
பறக்கும் எல்லைக்கல்லாக
உன் வெப்பக் கரம் தா
போகிறேன்
தூர இருந்து ரசிக்கிறேன்
என்னைச் சுற்றி
உன் ஒளிவட்டம்தான்
மீண்டும்....
கண்ணுக்குள் காட்டிய
கடவுளுக்கு நன்றி
என் இறக்கைகளை
பிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !

ஹேமா(சுவிஸ்)

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

என்னைச் சுற்றி
உன் ஒளிவட்டம்தான....

அழகான வரிகள்....

சின்னப்பயல் said...

என் இறக்கைகளை
பிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு

ஸ்ரீராம். said...

கல்மனதாகி விட்டதால்தான் கழற்றி எறிய முடிகிறது இறக்கைகளை, உணர்வுகளை!

Thozhirkalam Channel said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

றெக்கை கழட்டி பறக்குதடி ஹேமாவோட பிளாக்கு..

:}

Yoga.S. said...

பிழியும் கவி!

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை ஹேமா.

அப்பாதுரை said...

தைக்கும் கவிதை. ரசிக்கவும் முடிகிறது.

மாதேவி said...

"உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !"

படிக்கும்போது எமக்கு வலித்தாலும் ரசனை மேலோங்கி மயக்குகின்றது ஹேமா.
வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...
tm3

அருணா செல்வம் said...

கவிதையில் வலிக்கும் காதல் வலி நிஜத்தில்
சுகமானது தான் என்பது புரிகிறது...

உண்மை சொல்
வலிக்கிறதா உனக்கு...
கையும்...மனமும்?

சூப்பர் என் இனிய தோழி ஹேமா.

வெற்றிவேல் said...

வலி காதலில் நன்று...
கவிதையும் அருமை...

குட்டன்ஜி said...

//வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !//
மனம் வலித்தால் கையும் வலிக்கும்.

ananthu said...

#என் இறக்கைகளை
பிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !#

உண்மையிலேயே உருக்கும் வார்த்தைகள் ...

மாலதி said...

பல கடுமையான வேளைகளில் நான் உங்களின் பக்கம் வர இயலவில்லை பொறுத்து அருள்வீர் கார்த்திகை 27 மற்றும் எங்காளின் இதயங்கவர்ந்த அண்ணனுக்கு தலைவனுக்கு ஈராயிரம் ஆண்டுகள் தாமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் இதை பதிவு செய்த உமக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றியும் ...மாறாத தமிழ் பற்றுடன் மாலதி

vimalanperali said...

வலிக்கும்தான்,ஆனாலும் இறக்கை பிய்க்கிற அற்பத்தனம் இருக்கிறதே அது ஒரு பெரிய மன முரண்.

Post a Comment