*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, December 31, 2014

சூது கௌவும் 2014...

அகப்பா விழுத்தி
அகலவுரை நிறைத்து...

வேர்ப்பலாச் சுவையில்
வெதுவெதுப்பாய்
பூனை மயிரொதுக்கி
குங்கும் தேய்த்து
கொஞ்சி...

அகள விழியிலும்
முலை மேட்டிலும்
இடை பற்றும்
வயிற்றிலும்....

பொறு பொறு
கொஞ்சம் பொறு
போர்க்காலக் கிபீர்போல
ஏனிந்த வேகம்.

கண்ணாடி துளைக்கும்
ஒலிபோல்
ஒளிபோல்
முத்தங்களின்
மென்மையும்
மெதுமையும்
மேனி சுடுமாமே.

அங்கண் கொள்ளேன்
அகற்சி குறை.
பாலையில் ஊரும்
நீர்ப்பாம்பென
ரகசியங்களின்
பலவீனம் கண்டறியுமாம்
சில முத்தம்.

சூதாட்டத்தின்
விநோதச் சொல்போல
மறைந்திருக்குமாம் சில.

பிணைந்த பாம்பின் முத்தம்
பார்த்திருக்கிறேன்
இமைமூட மகுடியூது நீ.

கைது செய்கிறேன்
நான்
சில கௌரவ வார்த்தைகளை.

முலைப்பால்
சுவையறியாக் குழந்தைபோல
தவிப்பின் யுக்தி தரப்பாரேன்.

வேம்பூவின் வாசம் நிரப்பு
புங்கைப்பூவென உதிரவிடு
தாழ்முடி மல்லிகையோடு
கூடெடுத்துப்போ என் உயிரை
அது சுலபமுனக்கு.

வருடத்தின் கணக்கை
எண்ணி முடி
என்னில் முடி
எட்டிய நொடியே
நம்மோடு இனி 2014.

சுருக்காய் சுருக்காய்
இன்னும் சுருக்காய்
பாலேடு மீது படியும்
சிறு சிறு சுருங்கலாய்
இறுக்கி.....கிறுக்கி!!!


குழந்தைநிலா(ஹேமா)

8 comments:

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

விச்சு said...

வருடத்தின் கணக்கை எண்ணி முடி.. என்னில் முடி.. வரவர டிஆர் மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க.. ஹாஹா.. சூப்பரா இருந்துச்சு ஹேமா.

விச்சு said...

2014 விடைபெற்றுச்சென்றுவிட்டது. வரும் புதுவருடம் தங்களுக்கு இனிமை தருவதாய் அமையட்டும். என் இனிய மனம்நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் “ஹேமாஆஆஆ”...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

”தளிர் சுரேஷ்” said...

இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்!

Post a Comment