*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, March 31, 2014

முத்தத் துளிகள் (3)


புவியின் ஈரலிப்பை
சொற்களுக்குள்
தேக்கி வைத்திருக்கிறது
உன் கவிதைகள்.

எழுதமுன்
ஒரு முத்தம் தருகிறாய் காற்றுவழி
சில குழந்தைகள் தங்களுக்காகவும்
சில அம்மாக்கள் குழந்தைகளுக்காகவும்
சேமித்த நிலவிடம்.

நிலவுக்கும் காலாவதித் திகதியிருக்கும்
அதற்குள் தீர்த்துவிடு உன் முத்தத்தூதை !

நேற்றிரவு
நீ....
கன்னத்தில்
வரைந்த
மீசைக் கோலங்களை
சிநேகிதி...
கேலிச் சித்திரமாய்
வளைந்து காட்ட
நான்...
நாண வண்ணங்கள்
பூசி மறைக்க
வேண்டியதாயிற்று
இன்று !

முத்தத்திற்கு
விடுமுறை விட்டவன்
சொல்லவேயில்லை
எப்போ....
விடுப்பு முடியுமென...

நிலவடி நீயெனக்கென
சொல்லிச் சொல்லியே
ரசித்த
என் கிராதகன்
தேயவைக்கிறான்
காக்கவைத்து

அவன் நினைவுகள்
என்ன....
எனக்கான
அவன் குழந்தையோ
நடு இரவிலும்
தூங்கவிடாமல் !

இதழ் ஒற்றி
எனக்காய்
வழியனுப்பும்
அத்தனை முத்தங்களும்
சுற்றி வளைத்த
ஈட்டி முனைகளில்
சிறைப்படுகிறது.

நினைத்திருக்கிறேன்
தப்பிதலுக்கான இறகொன்றை
இனி வரும் கனவில் அனுப்ப.

அதுவரை
நீர்த்த முத்தமாய்
ரூபமெடுக்கட்டும் அவைகள் !

ஹேமா(சுவிஸ்)

4 comments:

தனிமரம் said...

நிலவடி நீயெனக்கென
சொல்லிச் சொல்லியே
ரசித்த
என் கிராதகன்// கிராதகன் என்றாள் கொஞ்சம் பொழிப்புரை கொடுத்து இருக்கலாம் கவிதை பாடு பொருள் அருமை!

தனிமரம் said...

நினைத்திருக்கிறேன்
தப்பிதலுக்கான இறகொன்றை
இனி வரும் கனவில் அனுப்ப.
//ம்ம் ஏக்கம் நிறைந்த கவர்ந்த வரிகள்!

Unknown said...

மீசைக் கோலங்கள்.............ஹ!ஹ!!ஹா!!!!

சென்னை பித்தன் said...

//முத்தத்திற்கு
விடுமுறை விட்டவன்
சொல்லவேயில்லை
எப்போ....
விடுப்பு முடியுமென...//

கொடிய கிராதகன்தான்!

Post a Comment