*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 20, 2013

ராம் ராம்....மழை...


ஒரே இரவில் கொண்டும்
அதே.....
ஒற்றை இரவில் கொன்றும்
கழி(ளி)க்குமிந்தப் பெருமழை !

மழை முத்தமிட்ட
பூமியில்
இருள் கவிய
என் படலை ஒதுங்கும்
உன் நினைவுகள்
என்னை
பிறாண்டுதலிலேயே
குறியாயிருக்கிறது !

மழைக்கவிதை கேட்டவன்
ப்ரிய மண்வாசனை காட்டி
மௌனமாய்
தானே....
தமிழ்ச்சாரலான
விந்தையிங்கு !

சாரல்...
துளி...
பெருமழை...

இதில்
எது நீ ?

அடித்துப் பொழி
உனக்காய் மட்டும்
முளைக்கும்
குடைக்காளானாய் நான் !

மழையாய்
நனைத்தவன் அங்கிருக்க
நடுங்குபவள் நான்
வைத்தியர் விசாரிப்பில்
ஊசி எனக்குத்தானாம் !

மழை கேட்டவன் மழையாகி...
பின் மழையாக்கி....

ஒத்தி வைக்கப்படுகிறது
இப்போதைக்கு
சில மழைக்கவிதைகள்!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடித்துப் பொழிந்து விட்டது வரிகள்...

ராமலக்ஷ்மி said...

கவி மழை!

அனைத்தும் அருமை.

sury siva said...

கவிதை மழை பொழிகிறது.
ஒவ்வொரு எழுத்தும்
ஒவ்வொரு வரியும்
உள்ளத்தை நனைக்கிறது. .

இடி இல்லை மின்னல் இல்லை
இனிய நீரில் நனைய வாரீர்.



சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

விச்சு said...

அடித்து பெய்த மழை சற்றே ஓய்ந்து ஓய்வெடுக்கிறதோ! இடி மின்னலுடன் மீண்டும் பொழிவதற்கு...

Post a Comment