*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, July 27, 2013

கொஞ்ச நாட்களாய்.....


ஆறாம் விரலோடு
என் கனவில் வரும்
நான்
சிவப்பு வண்ணத்திலும்...

சொற் கேளா
குழந்தையென
என் பொழுதுகளும்....

ஒற்றை அலைவரிசையில்
இயங்கும் மனம்
ஏதோ ஒரு பய
கிலேசத்தோடும்....

நூறு முறை
வானொலியில்
எவரினதோ
மரண அறிவித்தல்
சொல்லும் உன் குரல்
என்னுள்
அமிழ்ந்து
மூழ்கிக்கொண்டிருக்க....

அலையடித்துத் தூக்கியெறியப்பட்ட
சிறுமீனின் துடிப்பு
இன்னும் ஒரு
நொடிதானென
அறிவிக்கிறது
வானிலிருந்து
நூலிறங்கிய வாழ்வொன்று!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

கவியாழி said...

சொற்கேளா மனுஷி என்பதில் நியாயம் உள்ளதா?

sathishsangkavi.blogspot.com said...

Wav.... Beautiful lines...

Yaathoramani.blogspot.com said...

அலையடித்து தூக்கியெறியப்பட்ட
மீனின் துடிப்பு
அருமையான உவமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

அலையடித்துத் தூக்கியெறியப்பட்ட
சிறுமீனின் துடிப்பு//

ரசித்தேன்....!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அற்புதம் ஹேமா.

இளமதி said...

என்னவெனச் சொல்ல என் தோழியே!..

அனைவரும் ரசித்த சிறுமீனின் துடிப்பு என்னியத்திலும் துடிக்கின்றது...

அருமை!
வாழ்த்துக்கள்!

த ம.4

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான வரிகள்! அருமையான படைப்பு! நன்றி!

Post a Comment