*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, January 17, 2010

தமிழ்மண விருது 2009.

மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்.தமிழ்மணத்திற்கும் என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகம் தெரியா உறவுகளுக்கும் காற்றில் கை குலுக்கிய என் நன்றி.

தமிழ்மண ஈழம் பிரிவில் இந்தக் கவிதைக்கான விருது.

கூட்டாஞ்சோறு உறவு கவிதை என் வாழ்வின் ஆன்மாவின் ஒரு பகுதி.இதில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் என்னோடு ஒன்றியவை.என் தாத்தா அம்மம்மாவீடு,அம்மம்மா காய்ச்சிய கூழ்,மாட்டுத்தொழுவம்,பெரிய 3 மாமரம்,அதன் கீழிருந்து பிலாவிலை மடித்து கை நீட்டிச் சண்டை போட்டுக் குடித்த கூழ் என்று...அத்தனையுமே என் இளமைக்காலம்.மறக்கமுடியா இந்த வார்த்தைகள் கோர்த்த கவிதைக்குக் கிடைத்த இந்த விருது என் வாழ்நாள் சந்தோஷம்.

மீண்டும் என்னை உற்சாகப்படுத்தி என்னோடு கை கோர்த்துக்கொண்ட என் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

ஹேமா(சுவிஸ்)

59 comments:

ஸ்ரீராம். said...

மிக்க சந்தோஷம்...வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப ரொம்ப சந்தோசம் ஹேமா. வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

மிகுந்த மகிழ்ச்சி...வாழ்த்துக்கள் ஹேமா

தமிழ் said...

வாழ்த்துகள்

Ashok D said...

really surprising news... congrats Hema & Cheers

பிரபாகர் said...

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் சகோதரி...

பிரபாகர்.

ஜோதிஜி said...

தகுதியான நபருக்கு, தகுதியான ஆக்கத்திற்கு சரியான பரிசு.

விருதுக்கும் தமிழ்மணத்திற்கு, உங்களுக்கும் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! ஹேமா!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மகிழ்ச்சியான செய்தி . வாழ்த்துகள் ஹேமா.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள் ஹேமா

Anonymous said...

வாழ்த்துக்கள்

கலா said...

ஹேமா !!
இன்றுதான் அந்தக் கவிதையைப்
படித்தேன் {முதல் படிக்கவில்லை}
எவ்வளவு அற்புதமான கவி.

பல....வருடங்கள் என்னையும்
பின்னோக்கிச் செல்ல வைத்தது
நானும் இவ்விளையாட்டெல்லாம்
பழைய ஈழத்தில்
விளையாடியதுண்டு ...நான்
சேர்ந்து விளையாடிய அனைத்துப்
பையன்களும் இன்று உயிருடன்
இல்லை ஞாபகத்தில்......ஞாபகம்
இதயத்தை முறுக்கிப் பிழிய ....
வெளிவருகிறது சிவப்பிரத்தம்.

உயிர் உள்ள வரை மறக்க முடியாத
வசந்தகாலமது.

கமலேஷ் said...

மிகவும் சந்தோசமாக இருக்கிறது தோழி வாழ்த்துக்கள்...

கலா said...

பண்பாட்டுத் தமிழ் மணம்
வீசுகிறது உங்கள் கவிவரிகளில்....

தமிழ் மணம் கொடுத்த பரிசு
இதற்கு உகந்ததே!!

தமிழால்.தமிழ்மலரால்
வாழ்த்து அர்சனைகள் இட்டு..
மேலும் தூபம்{ஊக்கம்}மூட்டி
ஆராதனை செய்து வாழ்த்துகிறது
என் இதயம் உன்னை.
எனக்கும் பெருமைதான்!!

கம்மாலை வளவு கலாஅம்மாதான்
நானடி பேத்தி நீ மறந்தாலும்...
நான் மறக்கமாட்டேன்
இந்தப் பாட்டி எப்படி இருக்கிறார்
என்று ஒருநாளாவது பேசினாயா?
தொடர்பு கொண்டாயா?
கவிதையிலாவது என் பெயர்
போட்டாய் நன்றி தாயே!!

அப்புச்சி said...

அப்பாடா விருதும் வாங்கியாச்சு

அப்புறம் என்ன கலக்கிறீங்கள்

உங்களுடைய உணர்வுகளுக்கு கிடைத்த அங்கீகாரமான விருதுக்கு எனது வாழ்த்துக்கள்

அப்புச்சி

ஜெயா said...

எங்கள் எல்லோரையும் தாய்மண்ணுக்குக்கூட்டிச்சென்று இளமைக்காலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த கூட்டாஞ்சோறு உறவுக்கான இந்த விருது உங்களுக்கு மட்டுமல்ல ஹேமா எங்களுக்கும் சந்தோசம். வாழ்த்துக்கள்******

அப்பாதுரை said...

தொடரட்டும், வாழ்த்துக்கள்

விஜய் said...

சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் தெரியவில்லை சகோதரி.

எனக்கு கிடைத்த விருதென எண்ணி மகிழ்கிறேன்

வாழ்த்துக்கள்

விஜய்

thamizhparavai said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா...

ஜெயா said...

கம்மாலை வளவு கலா அம்மாவுக்கு பதிலாக ஜெயா அம்மா என்று எழுதி இருந்தால் கலாவைப்போல நானும் பெருமைப்பட்டு இருப்பேன் ஹேமா,,ஏனென்றால் இந்த விளையாட்டெல்லாம் நானும் அன்று விளையாடியவள். இன்று நினைத்துப்பார்த்தால் வெ்றுமை தான் மிச்சம்.திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் அற்புதமான கவிதை. திரும்பத்திரும்ப படிக்கிறேன்*****

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள்டா குட்டீஸ்!

keep rocking..

NILAMUKILAN said...

மிகவும் மகிழ்ச்சி ஹேமா. உங்கள் கவிதை விருதுக்கு மிகத் தகுதியானதே. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் ஹேமா

துபாய் ராஜா said...

வாங்கிய விருதிற்கும், வாங்கப் போகும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் ஹேமா. :))

ப்ரியமுடன் வசந்த் said...

ஒஹ்...சொல்லவேயில்ல.. வாழ்த்துக்கள்ங்க ஹேமா...

ப்ரியமுடன் வசந்த் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க ஹேமா

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேம்ஸ் மேலும் வெற்றி மேல் வெற்றி வந்து சூழ வாழ்த்துகள்...

கலா பாட்டி....... எப்டியிருக்கீங்க பாட்டி...?

உங்க பேத்தி சரியில்ல பாட்டி.....

Chitra said...

Congratulations! Thats very nice.

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா.

Nathanjagk said...

கள்ளிப்பட்டியாக மனசு விசாலமாக இருக்கிறது.. அதில் ஒளிந்திருக்கிற ஒரு சிறு கொட்டாம்பெட்டியாக சிறுவயது நினைவுகள். கூட்டாஞ்​சோறு கவிதை மண்ணின் வார்த்தைகளின் களஞ்சியமாக இருக்கிறது.
விருதுக்கு வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan said...

ரொம்ப மகிழ்ச்சியான செய்தி ஹேமா.... வாழ்த்துக்கள் ..

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..

மேவி... said...

congrats hema.... am proud

Anonymous said...

உங்களுக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் தான் ஆச்சிரியம் ஹேமா...மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் தோழி மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

தோழியே உன் கவிதை வெற்றிபெற்றதில் என்ன ஆச்சரியம்
அது ஏற்கனவே தெரிந்ததுதானே

உங்கள் கவிதைகளில் அத்தனை எதார்த்தங்கள் கொட்டிக்கிடகின்றன.

மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

மாதேவி said...

"கூட்டாஞ் சோறு உறவு" க்கு தமிழ்மண விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மறக்கக்கூடிய உறவாஅது.

பாராட்டுக்கள்.

kanagu said...

வாழ்த்துக்கள் ஹேமா :) :) மிகவும் மகிழ்ச்சி :) :)

பித்தனின் வாக்கு said...

மிக்க மகிழ்வுடன் வாழ்த்துக்கள். இந்த விருது மட்டும் அல்ல இதுபோல பல விருதுகள் பெறும் தகுதி உங்கள் கவிதைகளுக்கு உள்ளது. எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஹேமா நான் பதிவர் வீட்டு சமையல் அறையில் என்னும் பதிவு ஒன்று போட்டுள்ளேன். படித்து விட்டு திட்டவும். நன்றி.

rvelkannan said...

வாழ்த்துகள் , வாழ்த்துகள், வாழ்த்துகள்

அத்திரி said...

ஹேமா வாழ்த்துக்கள்

meenakshi said...

வாழ்த்துக்கள் ஹேமா! ரொம்ப சந்தோஷமா இருக்கு!

Muniappan Pakkangal said...

Congrats Hema.

நிலாமதி said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..

மின்மினி RS said...

எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ஹேமா

வெற்றி பெற்றதுக்கு என் வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள் ஹேமா :-)

- இரவீ - said...

மிக மிக சந்தோஷம்... வாழ்த்துகள் ஹேமா.

ஹேமா said...

என்னோடு கை கோர்த்து என்னை வாழ்த்திய அத்தனை என் நண்பர்கள் உறவுகளுக்கு சந்தோஷமான மனம்நிறைந்த நன்றி நன்றி நன்றி.
இதே உற்சாகமும் ஊக்கமும் என்றும் தர வேண்டிக்கொள்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

மகிழ்ச்சி தோழி.. வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள் ஹேமா...

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தோழி!

நசரேயன் said...

வாழ்த்துக்கள் இன்னும் நிறைய சாதிக்க

V.N.Thangamani said...

ஒருவாரம் உள்ள வரலைன்னா.
என்னென்னமோ நடந்து போகுது.
வாழ்த்துக்கள் தோழி.
உங்களை விட நான் அதிகம் சந்தோசிக்கிறேன் ஹேமா.
வாழ்க வளமுடன்.

சந்தான சங்கர் said...

விருதுகளோடு கைகோர்த்த
தமிழ்மணம் இன்னுமோர்
ஊக்கம்..

என்றென்றும் வாழ்த்துக்களுடன்

சந்தான சங்கர்.

நேசமித்ரன் said...

மீதமற்ற ஆகாயத்தில் மின்னியொளிரும் நிசி நேரத்து பெயர் அறியாப் பறவையின் குதூகலம் அல்ல இது தன்னை வாசிக்கும் ஒவ்வொருவனும் உணரத்தரும் சொற்கள் உயர்த்தியிருக்கும் கடற்கரை வெள்ளி கட்டிடம்

வாழ்த்துகள் ஹேமா உங்களின் படைப்புகள் புத்துயிர்த்து மலர்ந்த நிலமாய் பச்சயம் கசியட்டும் இந்த ஊக்கத்தால்....

ராமலக்ஷ்மி said...

என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஹேமா!

க.பாலாசி said...

திங்கட்கிழமையே கண்டேன். உளம்கனிந்து மனமார வாழ்த்துக்கிறேன். அந்த கவிதையும் விருதினைப்பெற மிகத்தகுதியான ஒன்றுதான். (இப்படை தோற்கின் எப்படை வெல்லும்) மீண்டும் வாழ்த்துக்கள்.

கண்ணகி said...

வாழ்த்துக்கள் ஹேமா....

M.S.R. கோபிநாத் said...

ஹேமா, கொஞ்சம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பதிவுலகம் பக்கம் ஒரு நாலு நாளா வரல. அதான் பின்னூட்டம் இட தாமதம் ஆகிவிட்டது. இப்பொழுது சரியாகி விட்டது. இந்த விருதுகள் எல்லாம் உங்களுக்கு சாதாரணம் ஹேமா. உங்கள் கவிதைகள் எல்லாம் தொகுப்பாகி, அது புத்தகமாகி அதுக்கு ஒரு நாடு(கள்) தழுவிய விருது ஒன்று உங்களுக்கு காத்திருக்கு. அது தான் உங்களுக்கு உண்மையான விருதுனு நான் நினைக்கிறேன். இந்த விருதுகள் எல்லாம் அதுக்கான படிக்கட்டுகள் ஹேமா. தொடர்ந்து இதை விட பெட்டரா எழுதிக் கொண்டே இருங்கள். இந்த விருதுக்கும், நான் சொன்ன விருதுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ஹேமா, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறன் ;)

Post a Comment