*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, April 21, 2008

ஆசை...

ஆசை...ஆசை...ஆசை
உன்னோடு வாழ்ந்திட ஆசை
உயிருள் உறைந்திட ஆசை
பூ வைத்து பூஜிக்க ஆசை
போற்றிப் பாடிட ஆசை
பாதம் பணிந்திட ஆசை
பக்தையாய் தொழுதிட ஆசை
தென்றலாய் தடவிட ஆசை
திங்களாய் ஒளிதர ஆசை
நிழலால் தொடர்ந்திட ஆசை
நெஞ்சுக்குள் நிரம்பிட ஆசை
தூக்கமாய் தழுவிட ஆசை
துக்கத்தில் தோள்தர ஆசை
பேச்சின் குரலாக ஆசை
மூச்சின் காற்றாக ஆசை
கோபமாய் பேசிட ஆசை
கொஞ்சம் ஊடலும் ஆசை
செல்லம் கொஞ்சிட ஆசை
சொல்லும் கேட்டிட ஆசை
சிரிப்பில் கலந்திட ஆசை
அழுகையை ஆற்றிட ஆசை
சோகத்தில் மடி தர ஆசை
சுகத்தையும் பங்கிட ஆசை
தாயாய் அணைத்திட ஆசை
தாரமாய் நெருங்கிட ஆசை
எல்லாமே என் ஆசை...
இனி உனக்குள்ளும்
ஆசை...
இசையும் வரை
ஆசையோடு !!!

ஹேமா(சுவிஸ்)

2 comments:

- இரவீ - said...

எத்தனை...வெற்றிகள் இதுவரை?

விச்சு said...

அப்பப்பா எத்தனை ஆசைகள்!

Post a Comment