*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, February 26, 2008

எனக்கு யார்...நீ?


உனக்கு நானும்
எனக்கு நீயும்...
என்னவாய்
இருக்கிறோம்...
நீ சொன்ன...
பிரிந்தே கிடக்கும்
கதவுகளைப் போலவா
காத்திருப்போடு.
அமாவாசையாய்...
பெளர்ணமியாய்...
வருகிறாய் போகிறாய்
மெளனத்துள் முடங்கியபடி...
அமுங்கிபோன
கேள்விகள் பதில்களுடன்
மெளனமாய் நானும்...

இருண்ட மேகங்கள்
இடி முழக்கத்தோடு...
மழை இன்னும் இல்லை
என் மன நிலை போல
பார்வைக்காக காத்திருக்கிறேன்
விழி தர மறுக்கிறாய்...
உயிருக்காக காத்திருக்கிறேன்
சுவாசம் தர மறுக்கிறாய்...

பனி படர்ந்த தேசத்தில்
மணிக்கூட்டுச் சத்தம் மட்டும்
மெளனம் கலைத்த படி...
சூரியனின் வருகைக்காக
காத்திருக்கிறேன்
சிறு புல்லாய்...
பேசு...
நீ... முதலில்
நிறையப் பேசு
தெளிவுகள் பிறக்கும்
பேசிப் பேசியுமே...
தீர்க்கப்படாத...
தீராத தெளிவுகள்
எத்தனையோ
என் நாட்டு அரசியலாய்...

அன்பே...
பரந்த தேசததில்
அன்பும் உன் கையில்
ஆயுதமும் உன் கையில்
எதை விட்டெறிகிறாயோ
அதுவாய் உன் கையில்...அது
உன்னோடுதான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்...
நெஞ்சு முட்டி நிறைகிறது
உன் நினைவுச் சிதறல்கள்...
நன்றி சொல்லி... மறக்கவா
உன் ரசிகையானேன்...
அன்பே!!!!!!!!
எம்மை
பக்குவமாக சமைக்க
வழி செய்
வாழ்வு பக்குவப்பட...
அழகாய் எம் காதல்
பூக்கள் பூக்க!!!!!

ஹேமா(சுவிஸ்) 01.12.2006

1 comment:

விச்சு said...

பேசிப் பேசியுமே...
தீர்க்கப்படாத...
தீராத தெளிவுகள்
எத்தனையோ
என் நாட்டு அரசியலாய்...
சீரியசாக இருந்தாலும் நகைச்சுவையாய் உள்ளது.

Post a Comment