*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, February 22, 2008

விட்டு...விடு


தேறுதல் இல்லா
உன்...
நிசப்த இரவுகள்
தலையணையின்
துணையோடு
கண்ணீருக்குள்
கருக்கொண்டு
பெரு மூச்சாய் பிரசவிக்கும்.
குருதி வடியா
யுத்தம் உனக்குள்ளே.
எதிரியென்று
எவருமில்லை.
நீ தேடிய காதலே
உன் எதிரியாய்.
இறுக்கிப் பூட்டப்பட்ட
உன் பிரியக் காதல்
சாவி தேடுகிறது
வெளியில் பறப்பதற்காய்.
இனியவளே கொடுத்துவிடு
பிடிவாதம் என்?
வேண்டாம்...
விரும்பாத காதல்
நிரப்பாது நின்மதியை.
பிடிக்காத உறவது
படிதாண்டிப் போகிறது.
விரக்தியை விரட்டு
புது சக்தி பெறு.
விடியும் ஒரு பொழுது
உனக்காய்
உனக்கே உனக்காய்!!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

எதிரியென்று
எவருமில்லை.
நீ தேடிய காதலே
உன் எதிரியாய்.
வரிகளை எப்படி பிடிக்கிறீர்கள்?

Post a Comment