*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 22, 2014

கூடுடையாக் கேள்விகள்...


கேட்கும்
கேள்வி தவிர்க்க
பதிலாய்
இன்னொரு கேள்வி
இரண்டுக்கும் இடையிலொரு
மௌன இடைவெளிவிட்டு
மிக அழகாய்.

அவ்வளவு சுலபமாயில்லை
பதில் சொல்வது
ஆனாலும்
பதில் இருக்கிறது
ஒத்தமாதிரியும்
ஒவ்வாமையாயும்.

பதில் வெளிப்படுகையில்
மனதின் வடிவங்கள்
ஒருசமயம்
வக்ரமாயும்
விரசமாயும்
விகாரமாயும்
வீணானதாயும்
வெகுளித்தனமாயும்
இருக்கலாம்.

கேள்விகள் குறித்த பதில்கள்
கேள்விகளுக்குள்ளும்
பதில்கள் குறித்த கேள்விகள்
பதில்களுக்குள்ளுமே
இயல்புகளை
ஆக்கிரமித்தபடி.

பதில்களும் கேள்விகளும்
கைகளுக்குள்
சாதாரணமாயில்லை
கைராட்டுக்கள்போல்!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

Unknown said...

சரி தான்...........ஹூம்!

Post a Comment