Monday, January 20, 2014

உறவென்பது...

படைப்பின்
புதிரறுக்கா மனிதன்
பூட்டிக்கிடக்கும்
புரியா உறவுடைக்க
சாவியொன்று தேட
நினைப்பதேயில்லை.

பயங்களாய்
பயன்களாய்
பிறழ்வுகள் காட்டி
பிணைத்து நிற்கும் சங்கிலியாய்
உராய்ந்து தீ உமிழ்ந்தாலும்
உறவுகளின் உன்னதம்
அறிவதில்லை.

வியாபாரமாகிவிட்ட வாழ்வில்
உயிர்களைப் பணயமாக்கி
அண்டவெளியை
தனதாக்கி
ஈரமற்ற மனதிற்கு
தண்ணீர் தேடியலையும்
மனிதனுக்கு புரிவதில்லை
அணைக்கும் அன்பின் அதிசயத்தை.

காது குடைய
ஒற்றை இறகின் தேவைக்கு
ஒரு பறவையையே
உணவாக்கும்
இரக்கம் விற்கும்
ஈசன் பெயரில்
பெயர் புகழ் தேடி
கோடியாய் கொட்டி
தானம் செய்யும்
தர்மர்களுக்குத் தெரிவதில்லை
தாய் முலைதேடும்
குழந்தையின் பசியை.

உபத்திரவமற்ற
வதைசெய்யா
நண்பனோ எதிரியோ
என் உறவெனச் சொல்வதில்
பெருமையெனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

2 comments:

  1. வணக்கம்
    உபத்திரவமற்ற
    வதைசெய்யா
    நண்பனோ எதிரியோ
    என் உறவெனச் சொல்வதில்
    பெருமையெனக்கு!!!

    நல்ல கருத்தாடல் மிக்க வரிகள்... வாழ்த்துக்கள்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உண்மைகள்...

    பெருமை தொடரட்டும்...

    ReplyDelete